இன்னும் எவ்வளவு காலம் நாம் திரும்ப திரும்ப தாக்கப்படுவோம்...
என்று முதல் நாம் அன்னியர்களால் தாக்கப் படுகிறோம், என்று முதல் நமது அப்பாவி இந்திய மக்கள் கொல்லப்படுகிறார்கள்? இன்னும் எவ்வளவு காலம் நாம் திரும்ப திரும்ப அன்னிய அட்டூழியங்களுக்கு ஆளாவோம்? இதற்கு யார் காரணம்..யார் பொறுப்பு?
கி.பி.12-ம் நூற்றாண்டில் தைமூர் படையெடுத்தது தொடங்கி முகம்மது கோரி, முகம்மது கஜினி,அலாவுதீன் கில்ஜி,குத்புதீன் அய்பெக்....... ஒளரங்கசீப் வரை இப்படியாக முகம்மதிய படையெடுப்புகளாலும் அதன் பின்னர் ஆங்கிலேயர்களாலும் தொடர்ந்து கொல்லப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் வந்த நமது ஆருயிர் இந்திய சகோதரர்கள் இன்று தீவிரவாதிகளின் குறியாகி இருப்பது வேதனைக்குரிய விசயம்...
ஏன் தாக்க படுகிறோம்?..
காய்த்த மரம்தானே கல்லெறி படும்,அன்று மொகலாய மன்னர்கள் நம்மை நோக்கி படையெடுத்து வந்து லட்சக்கனக்கில் கொன்று குவித போது அவர்கள் கண்ணில் தெரிந்தது நம்முடைய செல்வ செழிப்புதான், வறண்ட பாலைவனங்களில் ஆட்சி புரிந்து அதை தவிர வேறெதுவும் தெரியாத அவர்களுக்கு நமது தேசம் ஒரு காய்த்த மரமாகவே தோன்றியது. பின்னர் வந்த ஆங்கிலேயர்களும் அதே கதை தான். ஆனால் இன்று திரும்பவும் நாம் தாக்கப்படுவது எதனால்?
கல்லெறிபட்டு பட்டு, பட்டுப்போன மரம் இன்று மீண்டும் செழித்து வளர்ந்து அன்றிருந்ததை விட சிறப்பானதொரு நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதுவும் ஒரு காரணம்.
எதனால் நம்மால் நம்மை இவற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியவில்லை என்று யோசித்து பார்த்தோமானால், அன்றைய இந்தியாவில் நமது குறுநில மன்னர்கள் அனைவரும் இணைந்து வடக்கில் இருந்து அன்னியர்கள் ஊடுறுவிய முக்கிய வழியான கைபர் கணவாய் பகுதியில் ஒரு கோட்டையை அமைத்து அதில் மிகச்சிறப்பான ஒருங்கிணைந்த படை வீரர்களை நிறுத்தி இருந்தால் எதிரிகளை ஊடுருவும் முன்பு அங்கேயே அடித்து விரட்டி இருக்கலாம். லட்சக்கணக்கான இந்தியர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். கோடிக்கனக்கில் தங்கமும் வைடூரியமும் வைரமும் நம் நாட்டை விட்டு போயிருந்திருக்காது.நாம் இன்று ஏழை நாடாக இருந்திருக்க மாட்டோம்.
இந்த வறலாற்றிலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கிறது. தற்காப்பு என்பது அதிரடியாக செயல்படுவதில்தான் இருக்கிறது.
இவர்களை பாதுகாக்க வேண்டியது யார் பொறுப்பு?
நாம் செய்யவேண்டியது என்ன... தீவிரவாதத்திற்கு எதிராக மென்மையான அணுகுமுறையை கைவிட வேண்டும்.தீவிரவாதத்திற்கு எதிராக பொடா போன்ற பயங்கர சட்டங்களை கையாள தயங்கக்கூடாது.
அதிரடியாக செயல்படுவோம். தாக்கபடுவதிலிருந்து தற்காத்துக் கொள்வோம். ஜெய் ஃகின்ந்
மிக கோரமாக நடந்து முடிந்த சட்ட கல்லூரி மாணவர்களின் மோதலில் தமிழகமே தலை குனிந்து நிற்கிறது. ஏன் இந்த மோதல்? மாணவர்களின் உரிமையை நிலை நாட்டவா? நாட்டினை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லவா? எதற்காக இந்த மோதல்...
சற்று சிந்தித்து பார்த்தால் சட்ட கல்லூரியில் நடந்த இந்திய தமிழக அவலம் தெளிவாக புலப்படும்..சட்ட கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல அனைத்து மாணவர்களும் சிந்திக்க வேண்டிய முக்கியமான விசயம் ஒரு மாணவராக உங்களது கடமை என்ன, எதற்காக கல்லூரிகளுக்கு செல்கிறீர்கள், நீங்கள் செய்யும் இத்தகைய காரியங்களை உங்கள் பெற்றோர் விரும்புவார்களா, இந்த சமுதாயம் உங்களிடம் விரும்புவதைதான் நீங்கள் செய்கிறீர்களா என்பதை சிந்தித்து செயல்படுங்கள்.
மாணவர்களின் இந்த மோதலையும் போராட்டங்களையும் சில மாணவ பிரதிநிதிகள் சமுதாய சிந்தனையாக கருதுவது வேதனைக்குரிய விசயம். எது சமுதாய சிந்தனை எது உனர்ச்சி போராட்டம் என்பதை உன்னிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். பிற்போக்குத்தனமான ஜாதிய மோதல்கள் உங்களை எந்த ஒரு உயர்ந்த லட்சியதிற்க்கும் இட்டுச் செல்லாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இந்த நிலையில் நமது மரியாதைக்குரிய முதல்வரும் எதிர்கட்சி தலைவரும் மாணவர் சமுதாயத்தை நல்வழி படுத்துவதை விட்டு விட்டு வழக்கம் போல் தங்களுக்குள் அடித்து கொள்ளுவது வேடிக்கையிலும் வேடிக்கை. எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும் அதை தீர்ப்பதை விட்டு திசை திருப்புவதிலேயே குறியாக இருக்கும் கருணாநிதியும், இவற்றையெல்லாம் தனக்கு சாதகமாக்க முயலும் ஜெயலலிதாவும் தமிழகத்திற்கு முதல்வராகவும் எதிர் கட்சி தலைவராகவும் அமைந்தது உன்மையில் தமிழகத்தின் துரதிர்ஷ்டமே. எல்லாவற்றிற்கும் ஒரு மாற்றம் உண்டு என்பதை இவர்கள் புரிந்து கொள்ளும் காலம் விரைவில் வரும் என்பதை மறந்து விடக் கூடாது.
WE NEED A POLITICAL REVOLUTION.